ஞாயிறு, 15 ஜனவரி, 2012

4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்: முழு வீடியோ


4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்: முழு வீடியோ
4000 இற்கும் அதிகமானோருடன் பயணம் செய்த பாரிய உல்லாச கப்பலொன்று இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைகாணவில்லை என அறிவிக்கப்பபட்டுள்ளது. கொஸ்டா கொன்கோர்டினா எனும் இக்கப்பலில் சுமார் 3200 பயணிகள் உட்பட 4000 இற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். 290 மீற்றர் நீளமான இக்கப்பல் கிக்லியோ தீவுக்கருகிலுள்ள பவளப்பாறையில் நேற்றிரவு மோதியதையடுத்து கப்பல் ஒருபுறமாக சரிந்தது. கப்பல் மோதிய சத்தம் அவ்வூரை கிலிகொள்ளச் செய்துள்ளது.
இத்தாலி, ஜேர்மன், பிரான்;ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கப்பல் பயணிகளில் அடங்குவர். கப்பலிலிருந்த பயணிகளும் 1000 ஊழியர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் சுமார் 200 பேர் இன்னும் கப்பலில் இருப்பதாக இன்று காலை அதிகாரியொருவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன.
no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle park,Short story,Stories,Birthday Horoscope,Monthly Horoscope, Weekly horoscope, yoga, Kavithai Aaragam, Zoom, Tourism
பயணிகள் இரவு உணவு உட்கொள்ள அமர்ந்திருந்தபோது கப்பல் விபத்துக்குள்ளாகியதாக பயணியொருவர் தெரிவித்துள்ளார். கப்பல் சரியத் தொடங்கியதையடுத்து உயிர்தப்புவதற்காக கடலில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் 5 உணவு விடுதிகள், 13 மதுபான நிலையங்கள், 4 நீச்சல் தடாகங்கள், என்பனவற்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹலிவுட் நடிகைகள் நடிகர்கள் என இக் கப்பலில் பலர் இருந்ததாவும் மேலும் அறியப்படுகிறது.

சனி, 14 ஜனவரி, 2012

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Saudi Arabian Manபேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார். 

இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன. 

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது

டுவிட்டரில் மிஷல் ஒபாமா: சில மணிநேரத்தில் 1 லட்சம் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார்.

உலகப் பிரபலங்களில் பெரும்பாலானோர் சமூக வளைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் டுவிட்டரில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே சுமார் 1 லட்சம் ஆதரவாளர்கள் சேர்ந்துவிட்டனர். 

மிஷலின் முதல் டுவீட், என்னை டுவிட்டருக்கு வரவேற்றவர்களுக்கு மிக்க நன்றி. எம்.ஒ. அதாவது மிஷல் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் டுவிட்டரில் பிஒ என்று தான் குறிப்பிடுவார். அதாவது பாரக் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள்.

மிஷல் தனது டுவிட்டர் அக்கௌண்ட் மூலம் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் ஒபாமாவுக்கு டுவிட்டரில் 11 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஈராக்கியர்களின் படுகொலைகள் பற்றி பொய்யுரைக்க பணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்: நீதிமன்றில் பரபரப்பு சாட்சியம்

தனது உயரதிகாரி ஐந்து ஈராக்கிய பொது மக்களை கொன்றதாகவும் அதனை பற்றிய உணமைத்தகவல்களை மறைக்குமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாகவும் ஈராக் ஆக்கிரமிப்பில்பங்கு பற்றிய இராணுவ வீரர் அமெரிக்க இராணுவ நீதிமன்றில்  சாட்சியமளித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஈராக்கின் ஹதித் நகரில் ஏற்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் கொல்லப்பட்டமைக்கு பழி வாங்கும் நோக்கில் 24 ஈராக்கிய பொது மக்கள் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டமை சம்பந்தமான வழக்கு விசாரணை கலிபோர்னியா மாநிலத்தின் இராணுவ ஜூரி நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
 இப்பழிவாங்கும் படலத்தில் சம்பவ இடத்தின் அருகில் இருந்த வீடுகளில் வசித்த சிறுவர்கள் பெண்கள் உட்பட 19 ஈராக்கியர் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்டதோடு
குண்டுத்தாக்குதல் நடை பெற்ற இடத்தின் அருகில் இருந்த பொது மக்கள் ஐந்து ஈராக்கியர் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் சாட்சியாக அழைக்கப்பட்ட சனிக் டேலா க்ரூஸ் என்ற இராணுவ வீரரே மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தாவது:
 ஐந்து ஈராக்கியர் கார் ஒன்றின் அருகில் பாதையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த விதமான ஆயுதங்களும் இருக்கவில்லை. அவர்கள் வாகனத்தை நோக்கி நகரவுமில்லை. அவர்களை நோக்கி எனது உயரதிகாரி வுட்றிச் தனது துப்பாக்கியால் வேட்டுக்களை தீர்த்தார். இந்த சம்பவத்தின் போது அவர் சுட்ட முறையை நீதிமன்றில் க்ரூஸ் செயல் முறை மூலமும் காண்பித்தார்.
இதன் பின் நான் காரின் அருகில் சென்று நோக்கிய போது நான்கு அல்லது ஐந்து ஈராக்கியர் தரையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவ்விடத்துக்கு வந்த வுட்றிச் அவர்களின் உடலின் மேல் பாகங்களில் மேலும் வேட்டுக்கள் தீர்த்து அவர்களை கொன்றதை தான் கண்டதாக க்ரூஸ் சாட்சியமளித்துள்ளார்.
இதன் பின்னர் என்னிடம் வந்த வுட்றிச் யாராவது இது பற்றி கேட்டால் குறித்த ஈராக்கியர் காரில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருந்த வேளை ஈராக்கிய இராணுவம் அவர்களை கொன்றதாக கூறுமாறு என்னிடம் கூறினார்.
இச்சாட்சியத்தின் போது க்ரூஸ் இறந்த ஈராக்கியர் ஒருவரான் சிதைந்த தலைப்பாகத்தின் மீது தான் சிறுநீர் கழித்ததாகவும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தார்.
ஹதித் நகர பழி வாங்கல்களில் பொது மக்கள் மிகவும் அண்மையில்  வைத்து குறிபார்த்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதிகமான சூட்டுக்காயங்கள் தலையிலேயே காணப்பட்டன. குழந்தைகள் தமது தாயை அணைத்த நிலைகளில் இறந்து கிடந்தனர்.
இப்படுகொலைகளுடன் தொடர்புடைய ஏழு இராணுவ வீரர்கள் அமெரிக்க நீதித்துறையினால் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டமை ஈராக்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட வுட்றிச் சார்பில் வாதாடிய சட்டத்தரணி க்ரூஸ் இன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமானது என்று வாதிட்டார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஆப்கான் தாலிபான் அமெரிக்காவின் எதிரியல்ல: அமெரிக்கா

தலிபான் இயக்கத்துடன் பேசப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா அரசாங்க அறிக்கை ஒன்று ஆப்கான் தாலிபான் இயக்கம் அமெரிக்காவின் எதிரியல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேச்சுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக தகவகள் தெரிவிக்கின்றது.
இதேவளை தாலிபான் அமைப்பு கட்டாரில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டேன் என்று ஆப்கான் கர்சாய் தெரிவித்துள்ளார் , கட்டாரில் துறக்கப்படவுள்ள தாலிபான் அலுவலகம் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்காவின் எதிரிகள் பட்டியலில் இருந்து தாலிபான் அமைப்பின் பெயர் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானமை குறிபிடத்தக்கது.
தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த இஸ்லாமிய அமைப்பாகும். 2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா புஷ் அரசு கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போரின் மூலம் தாலிபான் அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டது. தலிபான் அமைப்பு பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் போரிட்டு வருகிறது இந்த வருடத்தில் மட்டும் 500 க்கும் அதிகமான நேட்டோ இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹம்மத் உமர் ஆவார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது