ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்த அமெரிக்க அதிகாரிகள் தமது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் . கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரின் வான் பரப்பில் அத்துமீறி இழவு பார்த்த அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிதாகவும் அமெரிக்க ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு பிரிட்டனும் ஆதரவு தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து ஈரானில் உள்ள இங்கிலாந்து தூததை வெளியேற்ற பாராளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார் இந்நிலையில் ஈரானின் வடக்குப்பகுதியில் உள்ள இராணுவத்தின் விமான தளத்தினை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமான R.Q.-170 விமானம் அத்துமீறி நுழைந்து உளவு பாத்து வாங்கி கட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக