சனி, 31 டிசம்பர், 2011

விபத்துக்கள் அதிகரிப்பு 26 வயது நபர் பலி

விபத்துக்கள் அதிகரிப்பு 26 வயது நபர் பலிமொனராகலை பொத்துவில் பிரதான வீதியில் சிறிகல எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 26 வயதுடய நபர் எனவும் இவர் ஒட்டுகம்மன பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொரியில் மோட்டார் வண்டி மொதுண்டதில் ஏற்பட்ட விபத்திலேயே இந்நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

புதன், 28 டிசம்பர், 2011

ஹமாஸ், இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவுதான்: ஹனியா

பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை ஹமாஸ் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் உள்ள இணைப்பை மறைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார் .Video
எகிப்தின் மக்கள் எழுச்சிக்கு பின்னர் தனது முதல் பயணத்தை மேற்கொண்டு எகிப்து சென்றுள்ளார். அதன் போது மக்களினால் அவருக்கு அமோக வரவேற்று வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுளார். கடந்த 2007 ஆம் ஆண்டு காசாவை இஸ்ரேல் முற்றுகை இட்டு தனது முழு அளவிலான தடைகளை விதித்ததை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு பிரதமர் எகிப்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது இது முதல் முறையாகும்.
காசா பகுதியை கட்டியெழுப்பும் நோக்கில் பிராந்திய நாடுகளிடம் உதவிகளை கோருவதே இந்த சுற்றுப் பயணத்தின் பிரதான நோக்கம் என ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இஸ்மைல் ஹனியான் எகிப்து, சூடான், துனீஷியா, கட்டார், பஹ்ரைன் மற்றும் துருக்கி நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன் முதல் கட்டமாக எகிப்து சென்றுள்ள இஸ்மைல் ஹனியான் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர் மொஹமட் பாடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பலஸ்தீன விவகாரம் குறித்து எப்போதும் கரிசணை காட்டி வருகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹம்மத் பாடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இரண்டு கட்ட வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு இஸ்ரேலுக்கு குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என ஹமாஸ் முன்னணி தலைவர் ஹனியான் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சலபிகள் அரசியல் கட்சியான அந்நூர் பிரமுகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்பதாக எகிப்து தகவல்கள் தெரிவிக்கின்றது.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பொத்துவில் முஸ்லிம் விவசாயிகளுக்கு வன இலாகா மீண்டும் தடை

பொத்துவில் கறங்கோவையிலுள்ள விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.பொத்துவில் கறங்கோவையிலுள்ள 502 ஏக்கர் விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை விதித்துள்ள விடயம் 21.12.2011ல் காணி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ரீ. ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.
அவர் தனது ஆட்சேபனையில் தெரிவித்துள்ளதாவது :
அண்மையில் காணி அமைச்சரவர்கள் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வருகை தந்து அங்குள்ள விவசாயிகளின் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி கூறுகின்றேன். அதேவேளையில் அங்கு கறங்கோவை விவசாயிகளுக்கு தற்போது நடந்துள்ள அநியாயத்தினை உங்களது அவசர நடவடிக்கைகளுக்காக முன்வைக்கின்றேன்.
கறங்கோவையில் 1981 முதல் சென்ற போகம்வரை தொடர்ந்து உரிமையுடன் விவசாயம் செய்து வருபவர்களுக்கு தடை விதிப்பதற்காக தற்போது புதுமையான ஒரு காரணத்தை வன இலாகவினர் முன்வைத்துள்ளதாக அறிகின்றேன்.
அண்டைய பிரதேச செயலகப்பிரிவாகிய லகுகலைப்பிரதேசத்துக்கும் கறங்கோவை விவசாயநிலம் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்துக்கும் இடையில் எல்லைப்பிரச்சினை உள்ளதாகவும் அப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் கறங்கோவை விவசாயிகள் தங்களது காணிகளுக்குள் செல்லக் கூடாது என வன இலாகாவினர்; மிகவும் மோசமான முறையில் விவசாயிகளை அவதிக்குட்படுத்தப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் எம்மிடம் முறையிட்டுள்ளார்கள்.
எல்லைப்பிரச்சினைக்கும் காணிகளில் பயிர் செய்வதற்கும் முடிச்சுப் போட முடியாது. முஸ்லிம் விவசாயிகள் சிங்களப் பிரதேசமாகிய லகுகலப்பிரதேசத்துக்குள் காணிகளை சொந்தமாக வைத்திருக்க முடியாது என்று சொல்வதைப் போன்ற ஒரு முறையற்ற செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பாகும். விவசாயிகளுக்குரிய பொறுப்பாக இதனை திரிவு படுத்தக் கூடாது.
1986ம் ஆண்டு புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டபோது எதேச்சதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் அப்போதிருந்த அரசு அப்பிரதேசத்தில் முறையான எல்லை நிர்ணயசபையினை அமைத்து காலாகாலமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமல் பாரபட்சமாக எல்லைகளை வகுத்துக் கொண்டது. இவ்வாறான ஒரு நியாயமற்ற எல்லைப்பிரச்சினைகளை மையமாக வைத்து அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புரங்களிலுள்ள முஸ்லிம் விவசாயிகளின் உரிமைகளில் அடிக்கடி அரச நிர்வாகம் வௌ;வேறு வடிவத்தில் தலையிடுவதை நான் ஆட்சேபி;கின்றேன்.
கறங்கோவை விவசாயிகளின் உரிமைப்பிரச்சினை ஏற்கனவே உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் பட்டதாகும்.
சமாதான உடன்படிக்கையின் பின்னர் இவ்விவசாயிகள் காணிகளை 2003ல் மீண்டும் செய்கை பண்ண முற்பட்ட வேளையில் வன இலாகாவினர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு தடையை விதித்த போது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டது. அதன் பின்னர் அப்போதிருந்த அமைச்சர்கள் அரசாங்க அதிபர்; பொலிஸ் உயர் அதிகாரிகள் நில அளவையாளர்கள் விவசாய அலுவலர்கள்ää வனவிலங்கு உயர் அதிகாரிகள்ää பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் அவ்வப்போது கறங்கோவை காணிக்குள் சென்று பார்வையிட்டதன் பின்னர் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அரச அதிபரின் பணிப்புரைக்மைய இக்காணிகள் நில அளவை செய்யப்பட்டு 502 ஏக்கர் காணியை முஸ்லிம் விவசாயிகளுக்கு வழங்குவதென முடிவும் எடுக்கப்பட்டது.
12.12.2006ல் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் காணி உத்தரவுப் பத்திரங்கள் பல்வேறு காரணங்களினால் கைவசம் இல்லாதவர்களுக்கு விசாரணை செய்து புதிதாக வழங்குவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதற்கமைய பொத்துவில் பிரதேச செயலாளரினால் ஏற்கனவே 96 பேருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டும் உள்ளது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் மீண்டும் புதிய உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்படும் போதுää கையொப்பம் இட வேண்டியது லகுகல பிரதேச செயலாளரா அல்லது பொத்துவில் பிரதேச செயலாளரா என்ற ஒரு புதிய பிரச்சினையை முன்வைத்து விவசாயிகள் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள
ஏற்கனவே சுமார் 300 ஏக்கர் நிலம் உழுவப்பட்ட நிலையில் மேலும் விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென்பதனை திட்டமிட்ட பழிவாங்கலாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.
எனவே அமைச்சரவர்கள் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு அவசரமாக தீர்வை வழங்க வேண்டும் என்று ஹசன் அலி தனது ஆட்சேபனைக்; கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்”
இக்கடிதத்தை சென்ற 21ம் திகதி வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதி நாளன்று அமைச்சர் ஜனக பண்டார தென்ன்கோனிடம் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஒப்படைத்து மேலும் பல விளக்கங்களை அளித்ததாகவும் அவர் கூறினார்
முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்துக்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டும் என்றும் எடுத்துரைத்ததனால்; அவசரகவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் பறிபோன காணிகளை மீட்டெடுப்பதற்கும் தற்போது பாவனையில் உள்ள காணிகளை மேலும் பறிபோகாமல் காப்பாற்றுவதற்கும் ஒரு பொதுவான செயல் திட்டத்தினை அனைத்து அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
அரசியல் தீர்வு பற்றி அக்கறை செலுத்தப்படும் இக்காலக்கட்டத்தில் நாம் காணி விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன் பிரதேச சபை மட்டத்தில் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 2007ம் ஆண்டு அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியதற்கும் இந்த பொத்துவில் காணிப்பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக இருந்ததனை நாம் நினைவு கூர்ந்துக் கொள்ள வேண்டும்

புதன், 21 டிசம்பர், 2011

கிழக்கு முஸ்லிம்கள்பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி

கிழக்கு முஸ்லிம்களை நோக்கி பிரபல ஆங்கில ஊடகங்களும் புலி சார்பு ஊடகங்களும் திட்டமிட்டு சதிவலைகளை பின்னுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளும், அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் ஆங்கில செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதை தூக்கிப்பிடித்துகொண்டு புலி சார்பு ஊடகங்க வரிந்து கட்டுகின்றன.
இதில் வேடிக்கையானதும் வேதனையானதுமான விடயம் என்னவென்றால், இந்த பொய் செய்திக்கு தூபம் இட்டவர் தன்னை முஸ்லிம்களின் பிரதிநிதி என்று காட்டிக்கொள்ளும் இலங்கையின் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா. இவரை மேற்கோள்காட்டியே ஆங்கில நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிகாத் அமைப்பின் நிதியுதவியுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கிழக்கிலுள்ள சுபி முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் சந்தித்து முறையிடப் போவதாகவும் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
மக்கள் உண்மையான இஸ்லாத்தை தெளிவாக பின்பற்றுவதை பொறுக்கமுடியாத அலவி மௌலானா இப்படி வரிந்து கட்டிக்கொண்டு தனது சொந்த சமூகத்தின் மீதே சேறு பூசுவதை மேற்கொள்கின்றார்.
வழிகேட்டிலிருந்து மக்கள் தெளிவுபெருவதை விரும்பாத இவர் தனது குற்றச்சாட்டில் கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சுபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் முனைவதாகவும், வகாபி இஸ்லாமிய பாடசாலையை பின்பற்றும் இந்த ஆயுதக்குழுக்கள், சுபி முஸ்லிம்களின் மசூதிகளையும், வழிபாட்டு இடங்களையும் தாக்குவதாகவும் புதிய கதையை கட்டிவிட்டுள்ளார்.
இந்த கதைகளுக்கு தலையும் வாலும் வைத்து ஆங்கில பத்திரிகையும் புலிசார்பு இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுக்களுக்கு பல மத்திய கிழக்கு நாடுகள் நிதியுதவி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் வறுமையில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஆயுதக்குழுக்களில் இணைகிறார்கள். இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து போரிடுவதற்குக் கூட அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த கப்சாவில் கதை கட்டப்பட்டுள்ளது.
இந்த பொய்யுரையில் தெளிவாக திட்டமிட்டு காத்தான்குடியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாத எமது சமூக காவலன் (?) அலவி அலவி மௌலானா காத்தான்குடியை கோர்த்து விட்டுள்ளார்.

புதன், 14 டிசம்பர், 2011

பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஆசிரியர் சமமின்மையை போக்க அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய கல்விக்கோட்டங்களில் இருந்து பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெவித்துள்ளார்.
அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் இருந்து 27 ஆசிரியர்களும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட த்தில் இருந்து 27 ஆசிரியர்க ளும் பொத்துவில் கல்வி கோட்ட த்துக்கு இ மாற்றப்பட்டுள்ளதாகவு ம் தெவித்தார்.
54 ஆசிரியர்களுக்கு நியம கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வு இம் இட மாற்றப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெவித்தார். இவ் இடமாற்றம் அடுத்த வருடம் (2012) ஜனவ மாதம் 2 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெவித்துள்ளார்.
அதேவேளை இன்று காலை தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தின் பெண் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் . இந்த ஆர்ப்பாட்டம் கல்முனையில் இடம்பெற்றது.

திங்கள், 12 டிசம்பர், 2011

உளவு விமானத்தை திருப்பித் தரமுடியாது:ஈரான்

நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது’ என, ஈரானின் புரட்சிப் படை உறுதியாகதெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. அது தொடர்பான வீடியோ வையும் ஈரான் வெளியிட்டது
இந்நிலையில், ஈரானின் புரட்சிப் படை துணைத் தளபதி ஹுசைன் சலாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது, போரைத் தூண்டும் நடவடிக்கை. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை’ என தெரிவித்துள்ளார் .ஆர்.க்யூ.,-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள், அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணினி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 டிசம்பர், 2011

ஈரான் அமெரிக்காவின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது

ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்த அமெரிக்க அதிகாரிகள் தமது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் . கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரின் வான் பரப்பில் அத்துமீறி இழவு பார்த்த அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிதாகவும் அமெரிக்க ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு பிரிட்டனும் ஆதரவு தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து ஈரானில் உள்ள இங்கிலாந்து தூததை வெளியேற்ற பாராளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார் இந்நிலையில் ஈரானின் வடக்குப்பகுதியில் உள்ள இராணுவத்தின் விமான தளத்தினை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமான R.Q.-170 விமானம் அத்துமீறி நுழைந்து உளவு பாத்து வாங்கி கட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.