வியாழன், 24 நவம்பர், 2011

ஈராக் ஆக்கிரமிப்பு:புஷ்ஷும், ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசிய தீர்ப்பாயம்

ஈராக்கை ஆக்கிரமிக்கும் வேளையில் போர் குற்றங்களை புரிந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசியாவின் போர் குற்றத்திற்கான தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
இதுக்குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஆக்கிரமிப்பிற்கு தலைமை தாங்கியதன் மூலமாக இருவரும் இனப் படுகொலையையும், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளனர். சட்டத்தையும், நீதியையும் பார்வையாளராக மாற்றிவிட்டு ஆக்கிரமிப்பு ராணுவம் ஈராக்கில் கூட்டுப் படுகொலையை நடத்தியுள்ளது.
பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.’ என கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம் கண்டறிந்தவற்றை சர்வதேச க்ரிமினல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். போர்க் குற்றவாளிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்ஷையும், டோனி ப்ளேயரையும் உட்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இலங்கை குழு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியுள்ளது

ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சவூதி உயர்மட்டத்தினரைச் சந்திக்க சென்றுள்ள இலங்கைக் குழு இக்குழு ரியாத்தில் மரணமுற்ற குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியுள்ளதுடன். ரியாத்தில் இருந்து 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ள Dawadmi மாநிலத்துக்குச் சென்று மரணித்த குழந்தையின் நெருங்கிய குலத் தலைவர்களைச் சந்தித்தது ரிஸானாவை எந்த வகையிலாவது விடுதலை செய்யுமாறு இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது .
இக்குழுவில் சென்றிருந்த ஆளுநர் எஸ். அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் காரங்களைப் பிடித்து கண்ணீர் மல்கிய நிலையில் ரிஸானாவை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தவ்பீக், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதி செயலாளர் ஐ. எம். அன்ஸார், மெளலவி தாசிம் மெளலவி சரூக், ஐ. ஆர். ஓ. பிரதிநிதி இம்ரான் ஜமால்தீன் ஆகியோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் வழக்கு விசாரணை பிராந்திய நீதிமன்றத்தில் இருந்து மன்னரின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் அங்கிருந்து நேற்று அறிவித்துள்ளார்.

வியாழன், 10 நவம்பர், 2011

இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் திட்டம்

அமெரிக்காவின் ஒபாமா நிருவாகம் ஈரான் மீதான திடீர் தாக்குதலிற்கு இஸ்ரேலிய அரசிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம், சதி நாச முயற்ச்சி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமது ஊடக ஊதுகுழல்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அமெரிக்க இராஜாங்க செயலக மிக முக்கிய அதிகாரி ஒருவரால் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் நிராகரிக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ள ஜேர்மனிக்கும் ஈரானிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் இஸ்ரேலிய அரசிற்கு கவலை தரும் விடயமாக மாறியுள்ளது. ஈரானிய அனுச்செறிவூட்டலிற்கு ஜேர்மன் ஆதரவளிப்பதுடன் அதை துரிதப்படுத்த முற்படுமானால் உலக அரங்கில் ஈரான் அனு ஆயுத வல்லமையுடைய தேசமாக மாறுவதுடன், ஜேர்மனியும் ஈரானிய ஏவுகணைத்தொழில் நுட்பத்துடன் வல்லரசாக உருவாகும். இவ்விரு நாடுகளின் இராணுவ வளற்ச்சி இஸ்ரேலிற்கும் அமெரிக்காவிற்கும் பெரும் பின்னடைவுகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உருவாக்கவல்லன.
கடந்த ஒக்டோபர் 03ல் டெல்அவிவிற்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் Leon Panetta லியோன் பெனேட்டா இது குறித்து இஸ்ரேலிய பிரதமருடனும், பாதுகாப்பு அமைச்சருடனும் தொடரான 5 மணித்தியால உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் மீதான திட்டமிட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை எப்படி நடைமுறை படுத்துவது என்பது தொடர்பாக அமெரிக்க சீ.ஐ.ஏ. அமைப்பானது பல ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்களை வகுத்துள்ளது. இவற்றை கூலிக்கு வேலை செய்யும் மூன்றாம் தரப்பு ஏஜென்ட்கள் மூலம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈரான் மீதான பயங்கரவாத மற்றும் சதிமுயற்ச்சி குற்றச்சாட்டுக்களை உலக அரங்கில் உண்மையென காட்டி ஐ.நா.சபையில் கொண்டு வரும் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் நாடகம் தெளிவாகிறது.
இதற்கு முன்பும் ஈரானை தாக்க பல முனைப்புகளுடன் தயார்படுத்தல்கள் செய்யப்பட்டபோது அவை கைகூடவில்லை. இறுதியாக ஒக்டோபர் முதல் வாரத்தில் தாக்குதல் நிகழ்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. 10 நாட்கள் தொடர் தாக்குதல் நிகழ்த்துவதன் மூலம் ஈரானை நிர்மூலம் செய்யும் திட்டம் தயார்படுத்தப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன தேச விவகாரம் அமெரிக்க கைகளை விட்டு வேறு திசைகளில் நகரும் அபாயம் காணப்பட்டதும், ஜேர்மனி பலஸ்தீன எல்லை 1931ல் உள்ளது போல் இருக்க வேண்டும் என கூறியதும் ஸியோனிஸ மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலை தாமதப்படுத்தியது. இப்போது இஸ்ரேல் ஊடாக அமெரிக்கா தனது இலக்கை அடையப்பார்க்கிறது.
சரிந்துள்ள பொருளாதாரத்தின் காரணமாக வோல் ஸ்டீரீட் மக்கள் எழுச்சியை திசை திருப்ப இவர்கள் ஈரான் யுத்தத்தை பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஜேர்மனிய ஈரானிய இராணுவ கூட்டிற்கு முன்னதான தாக்குதலே இஸ்ரேலை பாதுகாக்கும் என்பது இவர்களது எண்ணம். சவுதி இராஜதந்திரி Saudi Ambassador Adel al-Jubeir மீதான தாக்குதல் தொடர்பான அமெரிக்க நாடகம் அமெரிக்க அரசியல்வாதி ஜோன் மெக்கெய்ன் John McCain வாய்வழியாக அம்பலமானது வேறு விடயம்.

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை” என ஈரானின் ஜனாதிபதி அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிக்கும் சக்தியை நிலையை நெருங்கி விட்டதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் ஈரான் ஜனாதிபதி நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் அவரின் அறிகையில் இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை ஏப்பமிட்டு அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க முடியாது.
அணு ஆயுதமற்ற உலககை தோற்றுவிக்க அமெரிக்கா ஈடுபாடு காட்டவில்லை, தன்வசம் இருக்கும் அணுகுண்டுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா 81 பில்லியன்- $81 billion- அமெரிக்க டொலர்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ளது ஆனால் ஈரான் முழு ஆண்டுக்குமான அணு ஆய்வுக்காக செலவாக வெறும் 250 மில்லியனை-merely $250 million- மட்டும் ஒதுக்கியுள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் பொம்மை. மேற்க்கு சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5000 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது. ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி சவால் விடுத்துள்ளார்