வியாழன், 20 அக்டோபர், 2011

முஅம்மர் கடாபி கொல்லப்பட்டார்


சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லிபிய முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக லிபிய புரட்சிப் படைகளின் தளபதி அப்துல் ஹக்கீம் பெல்ஹஜ் உருதிப்படுத்தியதாக அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கடாபி அவர்கள் சிர்டே நகரில் ஏற்பட்ட சண்டையில் புரட்சிப் படையிடம் சிக்கி பின்னர் காயம் காரணமாக இறந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இறந்த முவாம்மர் கடாபியின் உடல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரகசியமான ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக புரட்சிப் படையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடாபியின் உடல் தங்களிடம் தற்பொழுது இருப்பதாகவும் அதை காரிலே இரகசியமான ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்வதாக புரட்சிப் படையின் அதிகாரி முகம்மத் அப்தல் கபி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக புரட்சிப் படை அதிகாரி ஜமால் அபூ ஸாலெஹ் முக்கிய தலைவர் பிடிபட்டதாக அல்ஜசீராவிடம் தெரிவித்தார். அதேநேரம் “அவர் பிடிபட்டுவிட்டார். அவரது இருகால்களிலும் காயம்பட்டிருக்கிறது,” என்று இடைக்கால அரச அதிகாரி அப்டல் மஜித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். வண்டியில் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முவாம்மர் கடாபி இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார், ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
சிர்டே நகரை கைப்பற்றியபோது முவாம்மர் கடாபியின் முன்னால் பேச்சாளர் மூஸா இப்ராகிமும் கைது செய்யப்பட்டதாக புரட்சிப் படைஅதிகாரி தெரிவித்தார்.
அல்ஜசீராவில் பதிவு செய்யப்பட்ட படம்

அல்ஜசீராவில் பதிவு செய்யப்பட்ட படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக