வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஜித்தா வீதி விபத்தில் இலங்கை தம்பதிகள் பலி

 சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையிலிருந்து யாத்திரீகர்களாகச் சென்ற கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மக்கா - ஜெத்தா வீதியில் புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தின்போது, அப்துல் வாஹிட் அப்துல் ஜவாட் (வயது-47), அவரது மனைவி அப்துல் ஹலீம் ஷம்சுன்நிஸா (வயது 42) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து யாத்திரீகர்களாக சென்றவர்களே உயிரிழந்துள்ளனர். அதே வான் வண்டியில் சென்ற மற்றுமொரு இலங்கையர் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மேற்படி உயர்ஜ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
___ E-mail to a friend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக