கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர். கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் சிர்தேவுக்கு கிழக்கே மத்தியத்தரைக் கடலை ஒட்டி அமைந்த துறைமுகத்தை போராளிகள கைப்பற்றிவிட்டதாக அந்தப் படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நகருக்கு வெளியே கடாபிக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதிலிருந்துதான் ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடைகால நிர்வாகத்துக்கு ஆதரவாக நேட்டோ விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. தூரத்திலிருந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இறுதி யுத்தம் தீவிரமடைந்திருப்பதால், நகரத்திலிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள சிர்தேவைக் கைப்பற்றிவிட்டால் தங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
லிபியா பெரும்பகுதியை இடைக்கால அரசின் போராளிகள் கைப்பற்றிவிட்ட நிலையிலும், கடாபி எங்கிருக்கிறார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. அவர் சிர்தே நகரில் பதுங்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்ற அவரது மகள் ஐசா, “எனது தந்தை இறுதிவரை போராடுவார்’ என்று கூறியிருந்தார். இதனால் கடாபி இன்னமும் லிபியாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக