ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பொத்துவிலுக்கான கல்வி வலயம் வேண்டும்

நீண்ட காலமாக பொத்துவில் மக்களின் பொத்துவிலுக்கான கல்வி வலயம் என்ற கோரிக்கை நிறைவேற்றபாடாமல் இழுத்தடிக்க படுவதாக பொத்துவில் பிரதேச கல்வியாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கடந்த வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், கின்னியா, ஓமரங்கடவல ஆகிய மூன்று கல்வி கோட்டங்களும் உப வலயக் கல்வி அலுவலகமாக இயங்கி வந்தன.
இதில் பொத்துவில் தவிர்ந்த மற்ற கோட்டங்களான கின்னியா, ஓமரங்கடவல ஆகிய இரண்டும் வலயக்கல்வி அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையிலும் பொத்துவில் கல்வி கோட்டம் தொடர்ந்தும் கோட்டமாகவே இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக