கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் ஹம்பாந்தோட்டைக்கு நகர்த்தி அதனையே இலங்கையின் வர்த்தகத் தலைநகரமா மாற்றும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவரான கலாநிதி பிறியத் பந்துல விக்கிரம தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரை வர்த்தக மற்றும் தொழில் நுட்ப நகரமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு நகரை வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு திட்டமொன்றினை செயற்படுத்த கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிபிடக்தக்கது
கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தேட்டையில் தேவையான அளவு நிலம் உள்ளதன் காரணமாகவுமே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது எனவும் கலாநிதி பிறியத் பந்துல அவர் தெரிவித்துள்ளார்
நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற துறைமுக பாதுகாப்பு அதிகாரிகளின் மகாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அண்மையில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டதுடன் விமான நிலைய அமைப்புப் பணிகளும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் நிர்வாக தலைநகரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே , வர்த்தக தலைநகரர் ஹம்பாந்தோட்டே அப்ப கொழும்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக